Tuesday, December 29, 2015

Recommendations for Chennai Film Festival

Recommendations for Chennai Film Festival:


The Fencer:  The Story happens during the World War in Russia. It's the story of a Fencing master who escapes from the army and serves in a school as a teacher.







The Dark Horse :  This film slightly reminded me of "Scouting for zebras" from last year. But this deals with a chess champion who has a bipolar disorder.



Love :  The Ardent fans who enjoyed the Goddard's 3D movie and the "Blue is the Warmest Color" will enjoy this movie to the core. ;)  (18+)





Taxi :  A Must Watch movie,  just for the director and for his passion for the movies. Jaffar Panahi, who was banned for making films is in Jail right now came out in a bail and shot the film and sent it to the film festival through his wife and won many awards. He also features in this movie..



Rams :  An wonderful movie about a sheep, not just for animal lovers.



Flocking:  It's a story of a young girl who accuses her fellow student for a sexual assault on her. A suspense drama will keep you thinking throughout the movie. This movie reminded me of 'The Hunt" from last year.



Embrace of the Serpent:  The Winner of Goa Film Festival and many more awards.  A Must Watch movie little slow to watch..




The above movies are my recommendations for Chennai Film Festivals. However there are few movies that are not screened in Chennai, but
screened in IFFI, Goa.



Danish Girl :  The story of a Man who has a feminine qualities in him becomes a woman.  Excellent perfomance by Eddie Redmayne. I would rate this as the Best Film of 2015. A Must Watch.



Accused : A true story of a lady who has been accused for killing babies and old people in a famous hospital. 



Cinemawala  (Marathi) An emotional drama about movie buff whose son chooses Pirate DVD selling as his profession. The climax is the highlight of the movie.



Filosofi Kopi Indonesia is famous for coffee plantations.  A coffee 'maker'who faces a challenge to make a best coffee in Indonesia to save his pride as well as his friend's coffee shop.



Frenzy: A slow thriller about three brothers, a man who sent in a parole to find a terrorist, A pig Hunter and a Terrrorist..! Excellent Screenplay gives you goose bumps at the end.



The Moving Forest:  A movie based on Shakespeare's "Hamlet". Excellent performance and a brilliant screenplay keeps the thriller interesting till the end. MUST Watch



The Man who Knew Infinity:  Sreenivasa Ramanujam, the great mathematician's life portrayal has been documented recently in Tamil. However like Richard Attenborough's Gandhi, I prefer this movie has more life.

Dev Patel simply rocks and grew up as a wonderful actor. MUST Watch



Enjoy Cinema!!


Saturday, November 21, 2015

உலக சினிமா திருவிழா - முன்னோட்டம்.


                   கோவாவில் நடைபெறும் உலக சினிமா திருவிழாவிற்கு வர எண்ணுபவர்களுக்கு கீழ்வரும் பதிவு பயன்படும் என நம்புகிறேன்.




கண்கவர் கோவாவும் உலக சினிமா திருவிழாவும் 

                 எப்போதுமே உலக மக்களால் விரும்பி வரக்கூடிய ஒரு இனிமையான சுற்றுலாத்தலம். அதில் உலக சினிமா திருவிழாவும் சேர்ந்து 
கொண்டால்.. கோலாகலம் தான். இங்கு நான் இரண்டாவது வருடமாக தொடர்ந்து வருவதை பெருமையாக நினைக்கிறேன். (இது என்ன சபரி மலையா? இங்கே வருதற்கு பெருமைப்பட? என்று பலர் நினைக்கக் கூடும்.)
என் போன்ற சினிமா வெறியர்கள் மட்டுமே இதன் மகத்துவத்தை புரிந்து கொள்ளக் கூடும். மற்றவர்கள் நினைப்பதை நினைத்து விட்டுப் போகட்டும்.
சென்ற ஆண்டு ரூ.முன்னூறு மட்டும் நுழைவுக் கட்டணம் வைத்திருந்தார்கள். ஆனால் இம்முறை நுழைவுக் கட்டணமே ஆயிரம் ரூபாய். இந்த விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாக அளவுக்கு அதிகமான கூட்டத்தை 
கட்டுப்படுத்த என்று காரணம் கூறினாலும், சினிமா ஆர்வலர்கள் கடன் வாங்கியாவது இங்கே வந்துவிடுவார்கள் என்பதை இப்போது உணர்ந்திருப்பார்கள்.



தங்குமிடம்

                        மற்றொரு பிரதான பிரச்சனை -தங்குமிடம். சாதாரண நாட்களில் ஆயிரம் ரூபாய் வசூலிக்கும் ஹோட்டல்கள் இந்த நவம்பர் முதல் ஏப்ரல் வரை மூவாயிரத்தில் தொடங்கி சாதாரண மக்கள் தங்க முடியாத அளவிற்கு வசூலிக்கவும் செய்கிறார்கள். இந்த திருவிழாவிற்கு நண்பர்களோடு வருபவர்கள் நான்கைந்து பேர்களாக சேர்ந்து ஒரு அறையை வாடகைக்கு எடுத்து பகிர்ந்து கொள்வார்கள். திருவிழா நடக்கும் இடத்திற்கு சற்றே தள்ளி அரை எடுத்தால் கொஞ்சம் வாடகை குறைய வாய்ப்பிருகிறது. ஆனால் வந்து போகும் செலவு கொஞ்சம் அதிகமாக இருக்கும்.


போக்குவரத்து 

                       சென்னை, பெங்களூரு, மங்களூரு என எந்த இடத்திலிருந்து வந்தாலும் இரயிலில் வருபவர்கள் மடகாவ்(ன்) எனும் இடத்திற்கு வந்து சேர வேண்டும். பின்னர் இங்கிருந்து மினி பஸ்கள் கடம்பா பஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும். அதில் பத்து ரூபாயிலிருந்து இருபது ரூபாய் வரை பஸ்களை பொறுத்தும், கூட்டத்தை பொறுத்தும் வசூலிப்பார்கள். அங்கிருந்து 
ப்ரீபெய்ட் முறையில் பனாஜி (பஞ்சிம்) செல்லும் பஸ்சிற்கு நாற்பது ரூபாய் செலுத்தி ஷட்டில் ஒன்றில் பனாஜி வரை கொண்டு விடுவார்கள். (சுமார் பதினைந்து கிலோமீட்டர்கள்) அங்கிருந்து ஏற்கனவே புக் செய்த ஹோட்டலுக்கு செல்ல ப்ரீபெய்ட் டேக்ஸி, ஆட்டோ அல்லது பைக் டாக்ஸி போன்ற போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆட்டோக்கள் கிட்டத்தட்ட சென்னையைப் போல் தான் அவர்கள் வாய்க்கு வந்த ரேட்டைக் கூறுவார்கள். ஹிந்தி தெரிந்தால் பேரம் பேசி பிழைத்துக் கொள்ளலாம். 

                          நீங்கள் தனியாளாக, அதிக சுமையில்லாமல் பயணிக்கிறீர்கள் என்றால் பைக் டேக்ஸி எடுத்துக் கொள்ளலாம். பைக் டேக்ஸி என்பது நாம் டூ-வீலருக்கு ஒரு டிரைவர் வைத்துக் கொள்வது போலத்தான். இரண்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு சுமார் முப்பதிலிருந்து நாற்பது வரை கேட்பார்கள். இவை அல்லாமல் பைக் அல்லது கார்களை நாம் வாடகைக்கு எடுத்தும் ஒட்டிக் கொள்ளலாம். நம் டிரைவர் லைசன்ஸ், பேன் (pan) கார்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை கொடுத்துவிட்டு (ஒரிஜினல்) முன்பணம் செலுத்தினால் தினவாடகை பைக்கிற்கு இருநூறும், காரிற்கு ஆயிரமும் வசூலிக்கிறார்கள். கோவாவை சுற்றிப் பார்க்க நினைப்பவர்கள் வாடகைக்கு எடுத்துக் கொள்வது பெட்டர்.
திருவிழாவிற்கு வருபவர்களுக்கு இது தேவைப்படாது. பெரும்பாலான நேரங்கள் திரைப்படம் பார்ப்பதிலேயே செலவாகும் என்பதால் இது வீணே.


திருவிழாவிற்கு பயன்படும்  வழிமுறைகள் 


                         திருவிழாவிற்கு வருபவர்கள் முன்கூட்டியே ஆன்லைனில் பணம் செலுத்தி ஒரு டெலிகேட் ஐடி வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். (டெய்லி பாஸ்களும் வழங்கப்படும்)  கோவா வந்ததும் பனாஜியிலிருந்து மிராமர் செல்லும் பேருந்தில் ஏறி நான்காவது ஸ்டாப்பில் (மார்க்கெட் அல்லது ஐநாக்ஸ் ஸ்டாப்) இறங்கி ஹெல்ப் டெஸ்க் சென்று நம் டெலிகேட் நம்பரைக் கூறினால் உடனடியாக ஒரு ஐடியும் ஒரு கிட்டும் (KIT - திருவிழாவில் கலந்து கொள்ளும் படங்களைப் பற்றிய ஒரு சிறுகுறிப்புடன் திருவிழாவில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகள் பற்றிய புத்தகங்கள் இருக்கும்) கொடுப்பார்கள். அதை வாங்கிக் கொண்டு நேராக டிக்கட் கவுண்டர் சென்று நாம் அடுத்த நாள் பார்க்க வேண்டிய படங்கள் தேர்வு செய்து டிக்கட் பெற வேண்டும். ஒருவருக்கு மூன்று படங்களுக்கான டிக்கட் கொடுக்கப்படும். அதற்கு மேலும் பார்க்க விரும்பினால் டிக்கட் வாங்கியவர்கள் போக மீதம் இடமிருந்தால் டிக்கட் இல்லாதவர்களையும் உள்ளே அனுமதிப்பார்கள். பெரும்பாலான நாட்களில் இதில் இடம் கிடைக்கும்.

                           பிறகென்ன, திரைப்பட விழாவில் வரிசையாக வெவ்வேறு நாட்டு கலாச்சாரங்கள், தொழில்நுட்பங்கள், மனிதர்களின் உணர்வுகள் என எல்லாவற்றையுமே அவர்கள் திரைப்படங்கள் வாயிலாக பார்த்து ரசிக்கலாம். 
உடன் கோவாவின் "எழில்"களையும் கண்டு ரசிக்கலாம். நாளையிலிருந்து தினமும் நான் பார்க்கும் படங்களைப் பற்றிய சிறு குறிப்பு தரலாம் என்றிருக்கிறேன். (நேரம் ஒத்துழைக்கும் பட்சத்தில்) 


Wednesday, November 11, 2015

அன்புள்ள அஜித்திற்கு, (வேதாளம் விமர்சனம்)

அன்புள்ள அஜித்திற்கு,

                         உங்களின் அதி-தீவிர இரசிகன் ஒருவன் எழுதிக் கொள்வது.  ஆவி என்பது எனது பெயர். ஆவி என்றெல்லாம் பெயர் இருக்குமா என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. வேதாளம் என்றே ஒருவருக்கு பெயர் இருக்கும் போது ஆவி என்று இருக்கக் கூடாதா? (தமாசு.. தமாசு..) பொதுவாக, வெளியாகும் எல்லா திரைப்படங்களையும் முதல் இரண்டு நாட்களிலேயே பார்த்து விடுவேன். அதுவும் உங்கள் படம் என்றால் சொல்லவே வேண்டாம். பெரும்பாலும் முதல் காட்சி தான். ஆனால் இந்த வேதாளத்தின் டீசரோ, பாடல்களோ  என்னை ஏனோ அவ்வளவாக ஈர்க்கவில்லை. பல முறை கேட்டபின் 'ஆலுமா டோலுமா' என்ற அந்த தத்துவப் பாடல் மட்டும் கொஞ்சம் பிடித்தது. சரி படத்திற்கு வருகிறேன்.

                        விக்ரமாதித்தன் வேதாளம் என்ன செய்யும்?  தன்னை மடக்கிப் பிடித்து தோளில் போட்டுக் கொண்டு செல்லும் விக்ரமனிடம் புதிது புதிதாய் கதை சொல்லும். பின் அவன் தளர்வடையும் நேரம் பார்த்து முருங்கை மரத்தில் ஏறிவிடும். விக்ரமனும் மனம் தளர மாட்டான், வேதாளமும் ஓயாது. படிக்கும் வாசகர்களுக்கு மீண்டும் மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறதே என்ற சலிப்பு தோன்றவே தோன்றாது. அதுதான்,  அந்த விறுவிறுப்பு தான்  வேதாளக் கதையின் பலம். இந்த 'சிறுத்தை' சிவாவின் வேதாளமும் அந்த விறுவிறுப்பில் கொஞ்சமும் சளைத்ததல்ல.



                        படத்தின் சிறப்பாக நான் கருதுவது உங்கள் சிரிப்பு. முதல் காட்சியில் அப்பாவியாய் சிரித்து ஒரு ரவுடியின் மனதில் இடம் பெறுவதாகட்டும், பின்னர் வில்லனின் முன் நயவஞ்சகமாக சிரிப்பதாகட்டும் எங்களின் 'தல' ஸ்பெஷல் அந்த சிரிப்பு தான். பெண்கள் மட்டுமல்ல ஆண்களே விரும்பும் ஒரு பேரழகுச் சிரிப்பு அது. படத்தின் கதை என்னவோ தமிழ் சினிமா எனும் வாஷிங் மெஷினில் துவைத்து , கிழித்து தொங்கவிடப்பட்ட பழிவாங்கும் கதை தான் என்றாலும், சீறிப் பாயும் ஸ்க்ரிப்ட் மற்றும் உங்களின்  அசத்தல் நடிப்பு இரண்டும் தான் படத்தை வித்தியாசப் படுத்திக் காண்பிக்கிறது.

                          இந்தப் படம் சிலருக்கு 'பாட்ஷா' வை நினைவு படுத்தலாம், சிலருக்கு 'ஏய்' படத்தை நினைவு படுத்தலாம். ஏன் சிலருக்கு 'ஜனாவை' கூட நினைவு படுத்தலாம். பழிவாங்கும் கதைகள் எல்லாவற்றுடன் மக்கள் ஒப்பிட்டுப் பார்ப்பது தவறல்லவே. ஆனால் படம் பார்க்கும் சினிமா இரசிகன் ஒவ்வொருவனும் ஏதாவது ஒரு விஷயத்தின் பால் ஈர்க்கப்பட்டு தனக்கு படம் பிடித்ததாய் சொல்லியே நகர்ந்ததைக் கண்டேன். அவர்கள் இரசித்ததை நான் கண்கூடாய்ப் பார்த்த சாட்சியும் ஆனேன்.

                            சுமாராய் வந்திருக்கிறது என்று நான் முதல் பத்தியில் கூறிய ஆலுமா டோலுமாவிற்கு என் முன் சீட்டில் அமர்ந்திருந்த மூன்று வயது சிறுவன் ஆடிய ஆட்டத்தை பற்றி சொல்லவா? இரண்டாம் நாள், இரசிகர்களின் ஆரவாரம் இருக்கும் என்று தெரிந்தும் வந்திருந்த ஒரு வயதான தாய், லக்ஷ்மி மேனனிடம் நீங்கள் அன்பைப் பொழியும் காட்சியில் கண்ணீர் விட்டு தன் சேலைத் தலைப்பால் துடைத்ததை சொல்லவா? இல்லை அந்த பெண்மணியின் கணவர், தம்பி இராமையா இறக்கும் தருவாயில் கூறுவதைக் கேட்டு சிறிது கலங்கி, மற்றவர் பார்த்திடா வண்ணம் முகம் துடைப்பது போல் விழி நீரை அகற்றினாரே அதைக் கூறவா?

                         இசை என்பது இரைச்சலாய்த் தோன்றினாலும் அந்த மெல்லிய தேகம் கொண்டவனை மாஸ்ட்ரோ வுடன் ஒப்பிடாமல் அவன் வயதிற்கு இது சற்று மேலாகவே தோன்றியது. ஆயினும் கொஞ்சம் தேர்ச்சி அவசியமென தோன்றியது. நீங்கள் பெயரிட்ட அப்புவை மன்னிக்கவும் சிவபாலனுக்கு புது கெட்டப் என்ற போதும் பெரிதாய் நடிக்க ஸ்கோப் இல்லையே. சரி நாயகி ஸ்ருதிக்கே அவ்வளவு தான் ஸ்பேஸ் இருந்தது. வெறும் கிளாமர் டால் கதாப்பாத்திரம் என்றே சொல்லலாம் அவருக்கு. ஆனால் லக்ஷ்மி மேனன் புகுந்து விளையாட கிடைத்த வாய்ப்பை அப்படியே பயன்படுத்தி ஒவ்வொரு அண்ணன்களுக்கும் தன் தங்கையை திரையில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டார்.

                         சரி தல, எந்த ஒரு படத்திலும் எதிரி பவர்புல்லா இருந்தால் தான் படம் மாஸ் ஆக இருக்கும் என்பது சினிமா விதி. எம்ஜியார், சிவாஜி , ரஜினி, கமல் என எல்லோருடைய படங்களும் இப்படித்தானே மக்கள் எதிர்பார்த்தார்கள், இரசித்தார்கள். ஆனால் இதில் வில்லர்கள் எல்லோரும் வருகிறார்கள், ஓரிரு வார்த்தை பேசுகிறார்கள். பின் மடிகிறார்கள். அவ்வளவு கெத்தாக இல்லையே என்று சிலர் கேட்கிறார்கள். முன் சொன்ன நாயகர்கள் ஹீரோ அவதாரத்தோடே வருவார்கள், ஹீரோவாகவே வாழ்வார்கள், வெல்வார்கள். ஆனால் வேதாளம் அப்படியல்ல, அவன் கெட்டவன், பணத்திற்காக எதையும் செய்யும் கேடுகெட்டவன். அவன் நல்லவனாக தேவைப்படும் ஒரு சிறு பொறி கிடைத்ததும் நல்லவனாக அவதாரம் எடுக்கிறீர்கள். ஸோ இதில் வில்லரும், ஹீரோவும் நீரே என்பதை புரியாதவர்களின் பிதற்றலாய்த் தான் நான் அதைப் பார்க்கிறேன்.

                          பெண்கள் வீட்டிற்குள் அடைந்து கிடப்பதற்கு ஒரு சில ஆண்கள் தான் காரணம், அவர்களை காந்தி கண்ட வீரப் பெண்ணாய், பாரதி கண்ட மாடர்ன் மங்கையாய் வலம் வர வேண்டும் என்பதை சொல்லும் காட்சி ஒன்றே போதும் தலைவா, தாய்மார்கள் நிச்சயம் போற்றிப் பாராட்டி குடும்பத்துடன் பார்த்து ரசிக்கப் போகிறார்கள். சூரியின் காமெடி எனும் சில மொக்கைகள் படத்தின் திருஷ்டிப் பொட்டு. சரி எல்லாமே அழகாய் அமைந்துவிட்டால் எப்படி?

                               மொத்தத்தில் வேதாளம் சிறார் முதல் பெரியவர்கள் வரை கண்டு ரசிக்கும்படி அமைந்து விட்டதில் உங்கள் இரசிகனாய் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. 'ஓபனிங் கிங்' என்ற பட்டத்தை இந்த முறையும் தக்க வைத்துக் கொண்டீர்கள். இம்முறை திரையுலக ஜாம்பவான் கமல் அவர்கள் படத்துடன் போட்டியிட்டும் சற்றும் தளர்வடையாத இந்த வேதாளம் பாக்ஸ் ஆபிஸ் என்ற முருங்கை மரத்தில் அசால்ட்டாக ஏறி நிற்பதை பெருமையுடன் பார்த்து இரசிக்கிறேன்.

                        - ஒரு நிறைவான திரைப்படத்தை பார்த்த மகிழ்ச்சியுடன்,
                                                             கோவை ஆவி.


பின்குறிப்பு:

                              தல, வேதாளத்தை பொறுத்தவரை அது சூப்பர் ஹிட் என்பது உறுதியாகிவிட்டது. படமும் சிறப்பாக இருந்த போதும் என்ற போதும் இந்த "மாஸ்" என்னும் முகமுடியை கொஞ்சம் கழற்றி வைத்துவிட்டு, வாலி, முகவரி போல் ஒரு சில மாறுபட்ட கதையம்சமுள்ள படங்களை உங்களிடமிருந்து  எதிர்பார்க்கிறோம். கலைஞானி நடித்த  வறுமையின் நிறம் சிகப்பு போல ஒரு சீரியஸ் சப்ஜெக்டில் நடிக்கலாம் தலைவரே..இந்தப் படங்கள்  மூன்று அல்லது நான்கு  வாரங்கள் ஹவுஸ்புல்லாக ஓடலாம். ஆனால் பொங்கலுக்கு இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக போட்டபின் எல்லோரும் மறந்து விடுவார்கள். So ஆலுமா டோலுமா Change your ஸ்டைலு மா!!
                     

     

Tuesday, November 10, 2015

தூங்காவனம் - விமர்சனம்

                     
                      பிரெஞ்சு படமான 'ஸ்லீப்லெஸ் நைட்ஸ்' இன் தழுவல் என்று சொல்லப்பட்டாலும் கமலஹாசனின் திரைக்கதை நமக்கு தமிழ்நாட்டு பாரம்பரியத்துடன் தான் இந்தப் படத்தை வழங்கியிருக்கிறது. டிரைலர் கொடுத்த த்ரில்லர் எபெக்ட் படத்தில் இருக்கிறதா? பார்ப்போம்.






சிறப்பு: 
                     தலைவர் அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருக்கிறார், இரண்டு மணி நேரம் நம்மால் அவரை கமல் என்று எண்ண முடியாதபடி கதாப்பாத்திரத்தின் தாக்கத்தை நமக்குள்ளும் புகுத்தி விடுகிறார். அதற்கு அவருடைய திரைக்கதையும், அல்டிமேட் நடிப்பும் காரணம் என்றால் மிகையாகாது.


கதை:
                 போதை மருந்து கும்பல் ஒன்றை பிடிக்கும் முயற்சியில் தன் மகனை அவர்கள் கடத்தி விட அவர்களிடமிருந்து மீட்கச் செல்லும் போது ஏற்படும் நெருக்கடிகள். அவற்றைத் தாண்டி தன் மகனைக் காப்பாற்ற முடிந்ததா என்பதே கதை.

 ஆவி Review:      
                   
                         ஒரே இரவில் நிகழும் கதையில் ஒரே பில்டிங்கில் எல்லோரும் தேடித் தேடி வருவதும், பொதுவாக 'பப்'களில் செக்யுரிட்டி காமிராக்கள் இருக்கும். அவற்றை புறக்கணித்து வில்லர் கமலைத் தேடி வருவதும், அதே போல் ஒரு துருப்புச் சீட்டைக் கையில் வைத்துக் கொண்டே அவரைத் தேடி அலைந்து கொண்டே இருப்பதும் லாஜிக் மீறல்கள் என்றாலும் கமலின் திரைக்கதை ஓட்டத்தில் அவை கண்டும் காணாமல்  கடக்கப் படுகிறது.

                         சிற்சில இடங்களில் தொய்வு, மற்றபடி படம் எங்கும் விறுவிறுப்புக்கு குறைவில்லை. ஆனால் த்ரில்லர் என்ற ஏதாவதொரு சம்சாரத்தை ச்சே சமாச்சாரத்தை எதிர்பார்த்து போனால் நிச்சயம் ஏமாற்றம் உண்டு.. பிரகாஷ்ராஜ், திரிஷா, ஆஷா, மது, கிஷோர், சம்பத், ஜெகன் என அனைவருக்கும் ஆங்காங்கே நடிக்க சின்ன சின்ன ஸ்பேஸ் உண்டு.. அந்த குட்டிப் பையனுக்கு நல்ல வாய்ப்பு,

                          குழப்பான கதையை தெளிவான வசனங்களும் காட்சியமைப்பும் காப்பாற்றியிருக்கிறது. ஆயினும் படம் முடிந்து வரும்போது படத்தில் சாம்ஸ் கேட்ட அதே கேள்வியை ஒரு முதியவர் என்னிடமும் கேட்டார் "இதுல கமல் போலீசா இல்லையா?", அவரிடம் "தெரியலையேப்பா " என்று சொல்ல நினைப்பதற்குள் கமலும் திரிஷாவும் போலிஸ் ஜீப்பில் வந்து அந்த பெரியவரின் வாயை அடைத்து விட்டனர்.

                           ஜிப்ரானின் இசையில் நல்ல முதிர்ச்சி. பாடல்கள் இல்லையென்ற போதும் பின்னணியில் இனிமை சேர்க்கிறார். கமலுடன் அவர் இணையும் நான்காவது படம் இது. ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு என எல்லாமுமே கைகொடுக்க கமலுக்கு இது மற்றுமொரு சூப்பர் ஹிட்.


பின்குறிப்பு:

"மது நாட்டுக்கு கேடு" என்று டைட்டிலில் போடுகிறார்கள். "மது உதட்டுக்கு நல்லது" என்று தலைவர் ஒரு 'குறியீடு' வைத்திருக்கிறார்.
                   



     

Monday, November 2, 2015

Sony Music acquires Thangamagan audio rights

Sony Music acquires the audio rights of 'Thanga Magan'. Thanga Magan features Dhanush, Samantha and Amy Jackson in the lead roles. K.S. Ravikumar and Radhika are playing the supporting roles. The movie is directed by Velraj, who delivered a blockbuster with Dhanush last year. The movie produced by Dhanush's home production 'Wunderbar Films'.

The Audio launch will be held in mid November and the movie is slated for December 18 release.

Surya Completes '24'

Actor Suriya completes his '24'. The actor tweeted on the social media thanking his colleagues who worked with him in the film. '24' is directed by Vikram kumar of 'Yavarum Nalam' fame. The movie is produced by his home banner "2D Entertainments". Samantha and Nithya menon playing lead roles in the movie.  A.R. Rahman composing music for the film.






He will be working with director Hari for 'Singam 3'.




Tuesday, September 8, 2015

பாயும் புலி - திரை விமர்சனம்

"பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மென்ட் வீக்கு" என்று வடிவேலு சொல்வாரே. அதுபோல வலுவற்ற கதையின் மேல் பின்னப்பட்ட திரைக்கதை என்பதால் பெரும்பாலான இடங்களில் ஆட்டம் காண்கிறது. படத்தின் ஆரம்பக் காட்சிகள் பிரமாதம் என்ற போதும் காஜல் அறிமுகத்திற்கு பின் தொய்வடைந்து புலி பூனை வேகத்தில் நகர ஆரம்பிக்கிறது.




கதை:

                 'அண்டர் கவர்' போலிஸ் வீட்டிற்கு தெரியாமல் ஏரியா தாதாக்களை தயவுதாட்சண்யமின்றி சம்ஹாரம் செய்துவிட்டு தன் நிழலான உறவே முக்கிய குற்றவாளியென தெரிந்த பின் அவரிடம் 'மனசாட்சியே' இல்லாமல் பல பேரைக் கொன்றுவிட்டதாய் சொல்லி அவரையும் காலி செய்யும் ஒரு "நேர்மையான" போலிஸ் அதிகாரியின்  கதை.

 ஆவி Review:      
                   
                         சுசீந்திரன்- விஷால்- இமான் என பாண்டியநாடு படத்தின் வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம். கொஞ்சம் செண்டிமெண்ட், கொஞ்சம் ரோமேன்ஸ், நிறைய ஆக்சன் என்ற அதே பார்ஃமுலாவை எடுத்துக் கொண்டது தவறில்லை. அதே போல அப்பா, அண்ணன் தம்பி, அண்ணனுக்கு ஒரு குழந்தை, வீட்டிற்கு தெரியாமல் பழிவாங்குதல் என பல 'அதே'க்கள் நம்மை சலிப்படைய வைக்கிறது.

                         விஷால் இதுபோன்ற டெம்ப்ளேட் படங்களில் நடிப்பதை தவிர்க்கலாம், நடிப்பில் குறை எதுவும் இல்லையென்றாலும் படத்தேர்வு மிக முக்கியம். காஜல் என்ற கதாநாயகிக்காக திரையரங்கம் வரும் ரசிகர்கள் குறைந்து விட்டதாகவே தோன்றுகிறது. இத்தனை படங்களில் நடித்த பின்னும் அம்மணிக்கு "ஷ" னாவும் வரல. "ரா" னாவும் வரல. சூரி வழக்கம் போல் மொக்கை காமெடிகள். பள்ளிக்கூட சிறுவனுக்கு பயப்ப்படுமிடத்தில் கொஞ்சம் தேவலாம்.

                         சமுத்திரகனிக்கு முக்கிய கதாபாத்திரம். கசங்காத கதர் சட்டையாய் வந்து போகிறார். ஏற்கனவே மாஸ் படத்தில் வில்லனாக பார்த்துவிட்டதால் இதில் வில்லன் என்ற ட்விஸ்ட் வீணாகிப் போகிறது. மேலும் ஆர்.கே எனும் நடிகனை வெறுமென உலவ விட்டிருப்பது கொடுமை. வேழ. ராமமூர்த்தி சுமாரான நடிப்பு. பாண்டியநாடு படத்தின் பலம் நிச்சயம் பாரதிராஜா. இதில் அதே போன்ற கதாப்பாத்திரம் என்றாலும் ஏனோ மனதில் தங்க மறுக்கிறார்.

                       
மைனஸ் :

                            கிளைமாக்ஸ் காட்சி இசை  மற்றும் பாடல்கள் சுமார். இமான் யுவனுடன் கூட்டணி சேருவார் போலத் தெரிகிறது. ஏகப்பட்ட திருப்பங்கள் இருந்தும் எதுவும் ரசிக்கும்படி அமையவில்லை. ஒளிப்பதிவு சுமார்.



                             மறைந்து தாக்கும் ஹீரோவுக்கும் பாயும்புலி டைட்டிலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.  மொத்தத்தில் இது ரசிகர்களை நோக்கி பாயும் புலி.

Tuesday, September 1, 2015

தனுஷுக்கு ஜோடியாக ஷாமிலி

                       

               மணிரத்னத்தின் அஞ்சலி திரைப்படத்தில் அறிமுகமாகி இராஜநடை, துர்கா என பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த "பேபி ஷாமிலி" இப்போது தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதில் தனுஷுக்கு இரட்டை வேடம் என்பது குறிப்பிடத்தக்கது.



பிரேமம் - 100வது நாள்..!

               பிரேமம்- மலையாளத் திரையுலகம் எப்போதும் கதை நிறைந்த திரைப்படங்களுக்காகவே பேசப்படும். இந்த பிரேமம் திரைப்படத்தில் திரைக்கதையே அதிகம் பேசப்பட்டது. பிரேமம் என்றால் காதல். காதல் கதையில் இனி புதிதாய் சொல்ல என்ன இருக்கிறது. கதையின் நாயகன் தன் பள்ளி நாட்களில் ஆரம்பித்து, பின் கல்லூரி, வேலை பார்க்குமிடம் என மூன்று கதாநாயகிகளை காதலிக்கிறார். அதை சுவாரஸ்யமாய் சொன்ன விதத்தில் தான் இந்த படம் வெற்றி பெற்றிருக்கிறது. இன்றைய நாட்களில் திரைப்படங்கள் இரண்டு வாரங்கள் ஓடுவதே அபூர்வமாகிவிட்டது. இந்தப்படம் நூறு நாட்களை கடந்து ஓடி நல்ல படங்களை நேசிக்கும் ரசிகர்கள் இன்னும் திரையரங்கிற்கு வரத்தான் செய்கிறார்கள் என்பதை உறுதி செய்திருக்கிறது.



               அல்போன்ஸ் புத்திரன்- நேரம் படத்தின் மூலம் இயக்குனராய் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் நுழைந்தவர். நேரத்திலும் சரி, பிரேமத்திலும் சரி திரைக்கதையை மட்டும் முழுதாய் நம்பி ஜெயித்திருக்கிறார். இவருக்கு ஆவி டாக்கீஸ் சார்பில் வாழ்த்துகளும் பாராட்டுகளும். ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தும் அசத்தியிருக்கிறார். தனக்கும் தமிழுக்கும் உள்ள நெருக்கத்தை 'மலர்' என்ற தமிழ்ப் பெண் கதாப்பாத்திரத்தை வைத்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சிலும் இடம் பிடித்துள்ளார்.

                  நிவின் பாலி - கேரளாவில் மம்மூட்டி, மோகன்லால் சகாப்தம் முடிந்து, பிரித்விராஜ் தலைமையில் அடுத்த தலைமுறை நடிகர்கள் வலம் வர ஆரம்பித்துள்ளனர். அதில் நிவின் பாலி தன் தேர்ந்த நடிப்பால் வருடத்தில் ஒன்றிரண்டு ஹிட் கொடுத்து, ப்ரித்விராஜ், பகத் பாசில் போன்றோரை பின்னுக்கு தள்ளி 'அடுத்த' சூப்பர் ஸ்டார் இடத்துக்கு தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார். பிரேமத்தில் பள்ளியில் படிக்கும் போது மீசையில்லாமல் தான் காதலிக்கும் பெண்ணின் டாடியிடம் உதை வாங்கி ஒடுவதாகட்டும், கல்லூரியில் மீசை பிரித்து மாஸ் காட்டுவதாகட்டும், மலருக்கு உருகும் போதாகட்டும், பின்னாளில் முதிர்ந்த காதலனாய் தோன்றுவதாகட்டும் கெட்டப்பும் அசத்தல், உடல் மொழியிலும் பின்னியிருக்கிறார்.

                   கதாநாயகிகள்: இன்று கேரள உலகமே கொண்டாடும் கனவு நாயகியாய், மணம் வீசும் மலராய் திரையில் தோன்றிய சாய் பல்லவி, நம்ம கோயம்புத்தூர் பொண்ணு ங்கறது நாம எல்லாம் பெருமை பட்டுக்கலாம். அம்மணி ஒரு குத்து டான்ஸ் போடுறாங்க பாருங்க, அந்த ஒரு ஸ்டெப்புக்காகவே படத்தை இன்னொரு முறை பார்க்கலாம். மடோன்னா செபஸ்டியன் அந்தக் கால ராதிகாவையும், சந்தியாவையும் கலந்து செய்த முகம். இவருடைய கணீர் குரல் இவருக்கு ப்ளஸ். விஜய் சேதுபதியுடன் தமிழிலும் களமிறங்குகிறார் இந்த அழகு தேவதை. அனுபமா பரமேஸ்வரன், அந்த அடர்த்தியான கூந்தலுக்காகவே இளைஞர்களின் மனம் கொள்ளை கொள்ளுவார்.




                   நண்பர்கள்: நண்பர்களாய் சபரீஷ் வர்மா, கிருஷ்ண சங்கர் படம் நெடுக நாயகனுடன் வந்து காதலுக்கு மரியாதை செய்கின்றனர். கல்லூரி ஆசிரியராய் வரும் வினய், ஜோஜோவாய் வரும் சிஜு மற்றும் படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நம் மனதில் ஆழமாய் பதியும் என்பதில் ஐயமில்லை.


                   கதை: காதல், காதல் தோல்வி, மீண்டும் காதல், மற்றுமொரு இழப்பு பின் காதல் போயின் காதல் என கடைசி வரை திகட்ட திகட்ட காதல் சொல்லும் படம். பல்வேறு பருவத்தில் ஜார்ஜ் என்ற கதையின் நாயகன் மனதில் பறக்கும் காதல் பட்டாம்பூச்சிகளே கதையின் கருவாய் அமைகிறது. காதலுக்கு குருவிக் கூடு போன்ற கூந்தல் கொண்ட தலையோ, பருக்கள் நிறைந்த முகமோ தடையாய் என்றுமே இருந்ததில்லை என்பதை சொல்லும் கவிதை.


                   மலையாள படமாச்சே புடிக்குமா, புரியுமான்னு யோசிக்காதீங்க. காதலுக்கு ஏதுங்க மொழி. தவிர படத்தில் பெரும்பாலும் தமிழ் டயலாக் தான். ரெண்டு தமிழ் பாட்டும் இருக்கு. ஒரு பாட்டை நம்ம அனிருத் பாடியிருக்கார். சபரீஷ் வர்மா எல்லா பாட்டும் எழுதி அசத்தியிருக்கிறார். அதிலும் "மலரே' பாடல் விஜய் யேசுதாசின் குரலில் தேன் போல் இனிக்கிறது. வினித் ஸ்ரீநிவாசன் குரலில் ஆலுவா புழ பாடலும் அருமை. ராஜேஷ் முருகேசனின் இசை நம்மை படத்தோடு ஒன்ற வைக்கிறது. மீண்டும் மீண்டும் ரசித்துப் பார்க்க வைக்கிறது. உங்களுக்கு காதல் பிடிக்கும்னா இந்த படமும் பிடிக்குங்க..!

             

Monday, August 31, 2015

புதுமுகம் -அறிமுகம் (Singer Kharesma)

கரீஸ்மா ரவிச்சந்திரன் - தமிழ் திரையுலகில் பாடகியாய் அவதாரம் எடுத்திருக்கும் சின்னப் பெண். சில பாடல்கள் ஆடியோ ரிலீஸ் செய்கின்ற போதே பாடகர்களின் குரலுக்காக, இல்லை வரிகளுக்காக பிடித்து விடும். சில பாடல்கள் படம் பார்த்த பின் காட்சிகளுக்காக பிடித்துப் போகும்.தனி ஒருவன் படத்தில்இவர் பாடியிருக்கும் இந்த பாடல் படம் பார்த்த போது பாடகரின் குரல் பிடித்துப் போய் நான் ரசித்த பாடல். இந்த சின்ன பெண்ணுக்குள் அம்புட்டு திறமை இருக்கு.. இன்னும் நிறைய பாடல்கள் தமிழில் பாட வாழ்த்துகள்!




                          இவர் இந்த பாடல் அல்லாது வேறு சில பாடல்களையும் ஒளிப்பதிவு செய்து இவரது யு-ட்யுப் சானலில் பதிவேற்றியுள்ளார். இவற்றை கண்டு ரசிக்க பின்வரும் சுட்டியை 'கிளிக்'கவும்.









இஞ்சி இடுப்பழகி - டிரெயிலர்

ஆர்யா, அனுஷ்கா இணைந்து நடிக்கும் 'இஞ்சி இடுப்பழகி' படத்தின் டிரெயிலர் இதோ. செப்டம்பர் 6 ஆடியோ  வெளியிடப்படும். தெலுங்கில் 'சைஸ் ஜீரோ' என்ற பெயரில் வெளியாகிறது.


Friday, August 28, 2015

தனி ஒருவன் - Movie Review

                        பேட்மேன் படங்களை பார்த்ததுண்டா? கதாநாயகன் பேட்மேன் கடைசிவரை தன் எதிரி ஜோக்கரை கொல்ல மாட்டார். அதே போல ஜோக்கரும் பேட்மேனை தோற்கடிப்பாரே தவிர அவரைக் கொல்ல மாட்டார். ஒருவருக்கொருவர் தத்தமது  புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி மற்றவரை வெல்ல நினைப்பர். கதாநாயகனும், வில்லனும் ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை என நிரூபிப்பர்.  கிட்டத்தட்ட அதுபோன்றதொரு கதைக்களம் தான் இந்த தனி ஒருவன்.





சிறப்பு: 
                         அரவிந்த் சாமியின் நடிப்பை மணிரத்னம் படங்களில் பார்த்து ரசித்ததுண்டு. அதில் அவர் நடிப்பைத் தாண்டி மணிரத்னத்தின் இயக்கம் வெளிப்படுவதையும் நாம் உணர்ந்திருப்போம். ஆனால் இதில் மனிதர் சித்தார்த் அபிமன்யு என்ற கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். இடைவேளைக்கு இருபது நிமிடங்கள் முன்னாடி தான் திரையில் தோன்றியபோதும் படம் முடிந்த பின்னும் நினைக்கும்படியான க்ளாஸ் ஆக்டிங். ஹேட்ஸ் ஆப் சார்!!

                            ஜெயம் ரவி தன் நடிப்புத் திறமையை அழகுற வெளிப்படுத்தியிருக்கிறார். நடிப்பில் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியிருக்கிறார் என்றே சொல்லலாம். இதுபோன்ற கதை தேர்வுகள் நிச்சயம் நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும்.


கதை:
                 நேர்மையான போலிஸ், அதே நேரத்தில் தனக்கான எதிரியை தேர்வு செய்து கொண்டு அவரை சிறைப்பிடிக்க முயலும் ஒரு காவல் அதிகாரி ரவி,  அவருடைய சவாலுக்கு பதிலாய் ரவியை வைத்தே தன் காரியங்களை நகர்த்தும் புத்திசாலி வில்லன் அரவிந்த் சாமி, இவர்களுக்கிடையேயான ஆடு-புலி ஆட்டம் தான் தனி ஒருவன். இடையே கொஞ்சம் புல்லுக்கட்டாய் கதாநாயகி நயன்தாராவின் காதல் எபிசோட்.

 ஆவி Review:      
                     
                         முதலில் படத்தின் இயக்குனர் இராஜாவுக்கு பாராட்டுகள். விறுவிறுப்பான திரைக்கதையும் வலுவான கதையும், அத்தோடு  நெற்றிப் பொட்டில் அடித்தாற் போன்ற சுபாவின் வசனங்களும் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் சீட்டின் நுனியில் அமர்ந்தே பார்க்க வைக்கிறது. குறிப்பாய் "எல்லோருக்கும் நல்லது செய்ய இறைவனாலேயே முடியாது, அப்புறம் தானே நாமெல்லாம்" எனும் போது அரங்கில் க்ளாப்ஸ் பறக்கிறது.

                         தம்பி ராமையா "டம்மி" அப்பாவாக வலுவான  கதாபாத்திரத்தில் வந்து நம்மை சிரிப்பில் ஆழ்த்துகிறார். அவரை தமிழ்நாட்டின் பிரம்மானந்தம் என்று சொன்னாலும் தகும். கணேஷ் வெங்கட்ராமன், ஹரிஷ் உத்தமன், ஸ்ரீசரண், அபிநயா, நாசர், முக்தா கோட்சே என அனைவரும் பலே பலே பலே. நயன்தாரா கொஞ்சம் முதிர்காதலியாய் தோன்றினாலும் அந்த தமிழ்நாட்டு உடையில் திரையில் தோன்றும் போது மனம் கொள்ளை கொள்கிறார்.

                          GPS கம் ரெக்கார்டர்  கருவியை வைத்தது தெரியாமல் தன் திட்டங்கள் வெளியே கசியும் போது ரவியின் நடிப்பு பிரமாதம் என்றால் தன் தந்தையிடம் பழத்தை உரித்துக் கொடுத்து குட்டிக் கதை சொல்லுமிடத்தில் அரவிந்த் சாமி சூப்பர் ஆக்டராய் ஜொலிக்கிறார். ஜெயம் ரவி அண்ட் டீம் செய்யும் முதல் பாதி ஆக்க்ஷன் காட்சிகள் அருமை.


செம்ம சீன்:

                           ஜெயம் ரவி சூழ்நிலையால் கட்டுண்டு நயன்தாராவிடம் கடிந்து கொள்வதும் பின் தன் காதலை உணர்த்துமிடமும், வாஆஆஆவ்!

மைனஸ் :

                             படத்தின் இறுதியில் வரும் "கண்ணால" பாடல் விறுவிறுவென போகும் படத்திற்கு ஸ்பீட் பிரேக்கர். தவிர இன்னும் சற்று அனுபவம் வாய்ந்த இசையமைப்பாளரால் படத்தை ஒருபடி உயர்த்தியிருக்க முடியும். "தனியொருவன் தீம் சாங்" தவிர இசை சுவையாய் இல்லை.



                                ஆங்காங்கே லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் புத்திசாலித்தனமான காட்சியமைப்புகளால் மோகன் ராஜா எனும் தனியொருவன் சேர்த்த டீம் சிறப்பாய் வேலை செய்து ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறது.



     

Wednesday, August 26, 2015

வீரபாண்டிய கட்டபொம்மன் - Classic Collections

                        அம்மா இன்றும் சொல்வார், நான் மூன்று மாத குழந்தையாக இருக்கையில் திரையரங்கம் சென்று அவர் பார்த்த படம் 'ஒரு தலை ராகம்'. அடம் பிடிக்காமல், கண்ணிமைக்காமல் முழுப் படத்தையும் பார்த்தேனாம். அதன் பின் நினைவு தெரிந்து பல முறை குடும்பத்தோடு திரையரங்கம் சென்று பார்த்தது என் நினைவில் உண்டு, படிப்பு முடிந்து வேலை என்றாகிவிட்ட பின்பு அம்மா அப்பாவோடு சேர்ந்து திரையரங்கில் படம்  பார்ப்பது அரிதாகிவிட்டது. தவிர அவர்களும் சின்னத்திரை ரசிகர்களாய் மாறிவிட்ட காரணத்தால் குடும்பத்தோடு ஒரு திரைப்படம் பார்க்கும் வழக்கம் கடிதம் எழுதுவதை போல் வழக்கொழிந்து போய்விட்டது. நேற்று திடீரென்று அம்மாவிடம் 'வீரபாண்டிய கட்டபொம்மன் போலாமா?' என்றதும் இருவரும் சரி என்றனர். அப்படியாக இந்த திருநெல்வேலி வீரனை தரிசிக்க புறப்பட்டோம்.



டிஜிட்டல் மாயாஜாலம்:

                            பழைய படங்கள் பல தேடித்தேடி பார்ப்பவன் என்ற முறையில் எனக்கு குஷியே. டிஜிட்டல் ரீஸ்டோரேஷன் தொழில்நுட்பம் வந்தபிறகு பழைய திரைப்படங்கள் புதுப் பொலிவுடன் வருவது சந்தோஷமே. இதற்கு முன் நினைத்தாலே இனிக்கும், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் பார்த்து உவகையடைந்திருக்கிறேன். என் தலைமுறையினர் இந்தப் படங்களை அரங்கில் பார்க்க இது ஓர் நல்ல வாய்ப்பாய் கருதினேன். கர்ணன் மிஸ் ஆகிவிட்டது. இந்தப் படத்தின் உள்ளே செல்லுமுன் இதன் தரம் பற்றி சொல்லியே ஆக வேண்டும். ஒலி சிறப்பாய் கவனமெடுத்து தரம் கூட்டியிருக்கிறார்கள். ஆனால் ஒளியை பொறுத்தவரை பிரமாதம் என்று சொல்லிவிட முடியாது. (ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சிறப்பாய் செய்திருந்தார்கள்). சில இடங்களில் Sepia என்று சொல்லப்படும் மங்கலான வண்ணத்திலேயே படம் தெரிகிறது. So Technically not satisfies a common audience who love to watch a quality film.

சிறப்பு: 
                         1957ல் பூஜை போடப்பட்டு பெரும்பாலான காட்சிகள் ஜெய்ப்பூரின் கொளுத்தும் வெயிலில் படமாக்கப்பட்டது. 1958 ல் படப்பிடிப்பு முடிந்து 1959 மே மாதம் லண்டன் ப்ரீமியரில் வெளியிடப்பட்டது. தமிழில் Technicolor தொழில்நுட்பத்தில் வெளிவந்த முதல் வண்ணப்படம் இதுவாகும்.  சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், பத்மினி, OAK தேவர், VK இராமசாமி ஆகியோர் நடித்த இந்த படத்திற்கு இசை ஜி,இராமநாதன். சிவாஜி கணேசன் அவர்கள் மேடையில் அரங்கேற்றிய வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்திற்கு திரைவடிவம் கொடுத்து  பத்மினி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியிருந்தார் BR பந்துலு. அந்த வருடத்திய சிறந்த படத்திற்கான தேசிய விருதையும், Afro-Asian திரைப்பட விழாவில் சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த இசை என மூன்று பிரிவுகளிலும் விருதுகளை வென்று குவித்தது.

கதை:

                       கட்டபொம்மன் வழிப்பறி திருடர்களை பிடிக்க மாறுவேடம் பூண்டு மாட்டுவண்டியில் வருவதில் ஆரம்பிக்கிறது படம். அவரிடம் சிக்கிக் கொள்ளும் வழிப்பறி கொள்ளையர் மூலம் ஆங்கிலேயரின் பிரித்தாளும் தந்திரத்தை உணர்கிறார் கட்டபொம்மன். தன் காளையை அடக்கும் வீரனை கைபிடிக்கத் துடிக்கும் வெள்ளையம்மாவையும் காளையை அடக்கி வீரத்தை நிரூபிக்கும்  வெள்ளையத்தேவனுக்கும் திருமணம் செய்து வைக்கிறார் மன்னன். ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டி அடிமையாய் வாழும் எட்டப்பன் என்பவனை உடன் சேர்த்துக் கொண்டு வரி கட்டாத கட்டபொம்மனை வளைத்துப் பிடிக்கிறது ஆங்கிலேயே படைகள். தப்பி ஓடி பின் அகப்பட்டு தூக்கிலடப் படுகிறார் அந்த மன்னர்மன்னர்.

 ஆவி Review:      
                       
                         நான் பார்த்த பெரும்பாலான படங்களில் சிவாஜி கணேசன் அவர்களின் மிகை ததும்பும் நடிப்பைக் கண்டிருக்கிறேன். (எ.கா : வியட்நாம் வீடு ) இந்தப் படத்தில் அந்த கம்பீரமும், உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பிலும் உலகின் மிகச்சிறந்த நடிகர்களுள் ஒருவர் இவர் என்று சொல்லும் வார்த்தைக்கு உரித்தாகிறார். அளவான அந்த மீசை, அவர் மனைவியோடு இருக்கும்போது அழகையும், போருக்கு செல்லும்போது வீரத்தையும் வெளிப்படுத்துவது அம்சம். உடன் நடித்த ஜெமினி- பத்மினி லவ் டிராக் லவ்லி.மருத்துவர் வேடமிட்டு பத்மினி வரும்போது ரோமென்ஸ் பிளஸ் எமோஷன் கலக்கல்.

                          இவர்களுக்கு அடுத்து முக்கியமாய் சொல்ல வேண்டியது ஜி.இராமநாதனின் இசை. மனிதர் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். ஆபரா (Opera) இசையாகட்டும், தமிழ்நாட்டு ஒலிக்கருவிகளோ, மேலைநாட்டு ஒலிக்கருவிகளோ எதுவாயினும் அத்தனை எழிலுடன் ஒலிக்கிறது. அதிலும் பி.பி.ஸ்ரீநிவாஸ், சுசிலா குரலில் ஒலிக்கும் "இன்பம் பொங்கும் வெண்ணிலா" பாடல் அடடடா. காதலன்/காதலி இல்லாதவரையும் புதுக்காதல் தேடச் செய்யும். எஸ்.வரலட்சுமியின் குரலில்  சிங்காரக் கண்ணே பாடலும்     அம்சம். மற்ற பாடல்களும் ஒகே.

                            ஆங்கிலப் படங்களின் தரங்களுக்கு ஒப்பிடும் போது சண்டைக் காட்சிகள் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கலாம். சில பாடல்கள் படத்தின் நீளத்தை கூட்டுவதோடு சலிப்பையும் கொடுக்கிறது. மேலும் ஒரு முக்கியமான திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார் பந்துலு. பத்மினியின் காரெக்டர், தைரியமான பெண்மணியாகவும், ஒரு வலிமையான ஆண்மகனை மணந்து கொள்பவராகவும் காட்டிவிட்டு இறுதிக் காட்சியில் "போகாதே என் கணவா" என்று தன் கணவனை போருக்கு செல்ல விடாமல் தடுப்பதாய் வருகிறது. இது அந்த கதாப்பாத்திரத்தின் இயல்புக்கு புறம்பாய் அமைந்திருக்கிறது.


                             தவிர பாகுபலி போன்ற சண்டைக் காட்சிகளை பார்த்த ரசிகனுக்கு இதில் வரும் சண்டைகள் சிரிப்பையே உண்டாக்குகிறது. சண்டைக்கு நடுவில் சிவாஜி ஓடி வந்து தன் தம்பி மகளை பார்த்து பீலிங்ஸ் சிந்திவிட்டு செல்வது அபத்தம். காளையை அடக்கும் காட்சியில் ஜெமினி களத்தில் இறங்குகிறார். க்ளோசப் ஷாட் தவிர மற்ற எல்லா காட்சிகளிலும் ஒரு நோஞ்சான் ஸ்டண்ட் நடிகர் நடிப்பது அப்பட்டமாக தெரிகிறது. அவர் உருவ ஒற்றுமையுடைய யாரையேனும் நடிக்க வைத்திருக்கலாம். வெடித்து சிரிக்க பெரிய நகைச்சுவைக் காட்சிகள் இல்லாதது மைனஸ். ஆடத்தெரியும் என்ற ஒரே காரணத்துக்காக ஆங்காங்கே பத்மினி அண்ட் சிஸ்டர்க்கு ஒரு பாட்டு போட்டிருப்பது பத்மினி பிக்சர்ஸ் நிறுவனத்தாரின் வியாபார தந்திரமோ? எது எப்படியோ மொத்தத்தில் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி இருந்தது. டிஜிட்டல் ஏமாற்றத்தை தவிர..!          

Friday, May 29, 2015

Massu Engira Maasilamani - Movie Review


Intro    
                                 'Never expect a serious movie from Venkat Prabhu' is a common thought among the audience who have seen his earlier movies. Well he has tried to break that in this movie. Has he able to do it successfully. Let's see!

                       

Plot
                           The director blended the current successful 'Horror' concept with the very old 80's revenge story. As usual there won't be anyone to question the logic in a ghost movie, the director had his own freedom to include romance, humor and few Investigation sequences as well.
                            
        
                                                                                                                                            Performance
                            Suriya's performance is notable and need to be appreciated in most of the film, and a great salute for choosing a different genre from the usual boring hero worshiping movies. Especially the Sakthi character stands out and would be rated as one of his matured acting. Massilamani character has nothing impressive to be mentioned though the scene where he helps the blind kid is touching one. Nayanthara, Brammanandham, Parthiban and Srilankan Tamil are used for marketing the movie.
         
                              Pranitha has done a extended cameo, however she has done her job well. Samuthirakani should think twice before accepting these kind of roles. Premji gives a big relief as there is no punch dialogues for him. Karunas, Sriman supporting the so called 'horror' movie.


Music-Direction
                               The actual scary part lies in the songs of the movie. You can spot people running out of the screens to save their life whenever a song is played. Simply Masss. Venkat Prabhu still keeps us guessing whether he can deliver a real good movie.


                                      Plus?
                                Suriya's Matured Performance and Prathiban's unique dialogues in the second half.

                                      Minus ?
                                Too many things to list out..!


  Massu (Pollution) - Title speaks for its content !



                           



Sunday, May 24, 2015

Kamalhaasan's Thoongavanam First look

The legendary actor is all set for his next venture 'Thoongavanam'. The movie will be produced by Rajkamal Film International jointly with Wide angle creations. The announcement about the title came couple of days from the actor himself. Today the first look of the movie has been released.







Saturday, May 23, 2015

டிமாண்ட்டி காலனி - திரை விமர்சனம்


இன்ட்ரோ  
                          வடிவேலு, விவேக் ஆகியோர்  விட்டுச் சென்ற இடத்தை பேய்களை வைத்து நிரப்பி அதற்கு  ஹாரர் காமெடி என்ற பெயரும் கொடுத்து சமீப காலமாக தமிழ் சினிமா உலகம் வசூலை அள்ளிக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே! தமிழில் சொல்லிக் கொள்ளும்படி ஹாரர் படங்கள் வருவதேயில்லை என்ற குறையைத் தீர்க்க வந்திருக்கிறது என கொஞ்சம் மிடுக்கோடு சொல்லிக் கொள்ளலாம்.!


                         

கதை
                            'ஈவில் டெட்' காலம் தொட்டு வந்த அதே கதை தான். ஊரே நுழைய பயப்படும் ஒரு மர்ம வீட்டிற்குள் விளையாட்டாக நுழையும் வாலிபர்கள் கதி என்ன என்பது தான். இதில் கொஞ்சம் டெக்னாலஜி, துளியூண்டு லாஜிக் சேர்த்து பரிமாறியிருக்கிறார்கள்.
                            
        
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                           தான் நடிக்கும் கதைகளை தேர்வு செய்வதில் எப்போதும் பாஸ் மார்க் வாங்கிவிடும் அருள்நிதி இதிலும் டிஸ்டிங்க்ஷன். நடனம், சோகம் போன்றவை இன்னும் மெருகேற வேண்டுமென்றாலும் இந்தப் படம் நிச்சயம் இவருடைய கேரியரில் சொல்லிக் கொள்ளும்படியான ஒரு படம் இது. நண்பர்களாய் வரும் மற்ற நடிகர்களும் நல்ல தேர்வு ப்ளஸ் நல்ல நடிப்பு. டிமாண்டியாக வருபவர் இரண்டாம் பாதியில் அசத்துகிறார். எம்.எஸ்.பாஸ்கர் சிறிய வேடமென்றாலும் நம்மை சிரிக்க வைக்கிறார்.

இசை- இயக்கம்
                           
                               ஏ.ஆர். முருகதாசின் கீழ் பணிபுரிந்த அனுபவம் கைகொடுத்திருக்கிறது இயக்குனர் அஜய் ஞானமுத்துவுக்கு. முதல் படம் என்பது எந்த ஒரு காட்சியிலும் தெரிவதில்லை. கதாநாயகியோ, குத்துப்பாட்டோ இல்லாமல் ஒரு 'தமிழ்ப் படம்' எடுத்ததற்காகவே இவருக்கு சபாஷ் போடத் தோன்றுகிறது. இடையிடையே சிறிது தொய்விருந்தாலும் பார்வையாளனை சீட்டின் நுனியில் அமர வைத்திருக்கிறார்.

                          கேபா ஜெரமியா, த்ரில்லர் படத்துக்கான உணர்வை இசையில் கொடுக்கிறார். அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு மற்றும் புவன் ஸ்ரீனிவாசனின் எடிட்டிங்கும் படத்துக்கு பெரிய ப்ளஸ்.


                                      மைனஸ் ?
                                படத்தில் ஹீரோயினே தேவையில்லை என்று முடிவெடுத்து விட்ட பிறகு அந்த 'ஜில்லு' கதாப்பாத்திரத்தையும் இயக்குனர் தவிர்த்திருந்தால் ஒரு க்ளீன் ஹாரர் த்ரில்லராக இருந்திருக்கும்..!


 Demonte Colony -  a Real Horror !



                           



Monday, April 13, 2015

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் - சிறுகதை

"ஆவி டாக்கீஸ்" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..! 

 குறும்பட- சிறுகதை போட்டியில் ரூ. 2000 முதல் பரிசு பெறும் சிறுகதை..!


படைப்பாக்கம் :  திருமதி. தமிழ் முகில் பிரகாசம்  அவர்கள் 


அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் 
              
           டிங் ! டிங் ! டிங் ! “  பள்ளிக்கூட மணி ஓசை கேட்டதும்,  அதுவரை பேச்சும் சிரிப்பும், கூச்சலும் கும்மாளமுமாய் விளையாடிக் கொண்டிருந்த சிறார் கூட்டம், “கா ! கா ! “ என்ற குரல் கேட்டதும் தம் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்ள பறந்தோடி வரும் காக்கை இனத்தைப் போல, தம் அறிவுப் பசியைத் தீர்த்துக் கொள்ள தத்தம் வகுப்பறை நோக்கி ஓடினர்.

     அன்று முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி துவங்கியது. விடுமுறையில் சுற்றுலா சென்று வந்த இனிய நினைவுகள், அங்கு தாங்கள் கண்ட பல புதிய விஷயங்கள், உறவினர்களை சந்தித்த மகிழ்ச்சியான தருணங்கள், சிறாருடன் கோலி, பம்பரம், பட்டம் என ஆசை தீர நாளெல்லாம் விளையாடிய நினைவுகள், கோயில் திருவிழா மகிழ்வலைகள் என்று தத்தமது இன்ப தருணங்களை நண்பர்களுடன் பகிர்ந்தவாறு சிறார் சலசலத்துக் கொண்டிருந்தனர்.

    முதல் இருக்கையில் கண்மணியும் வள்ளியும் அருகருகே அமர்ந்திருந்தனர். கண்மணியின் கையில் புதிதாய் ஒரு கடிகாரம். நடுவில் வாத்து பொம்மையின் முகம். அதைத் திறந்தால், உள்ளே அழகான கடிகாரம். அதைக் கண்டதும் வள்ளிக்கு மிகவும் பிடித்துப் போனது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அதை தொட்டுப் பார்த்துக் கொண்டாள். வள்ளி அதை தொட்டுப் பார்க்கும் போதெல்லாம் மெல்லியதாய் ஒரு புன்முறுவலுடன் வள்ளியை பார்ப்பாள் கண்மணி. சமயங்களில், ஆசிரியர் பாடம் நடத்தும் போதும், வள்ளியின் கவனம் கடிகாரத்தின் மீதே சென்றது. சிரமப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள் வள்ளி.

           உணவு இடைவேளையின் போது, கண்மணி வள்ளியிடம்,
“ வள்ளி ! இந்தா புள்ள, நீ இந்த கடிகாரத்தை கொஞ்ச நேரம் கட்டிக்கோ. உனக்கு இது ரொம்ப புடிச்சிருக்குன்னு எனக்கு தெரியும். நான் சாயங்காலம் பள்ளிக்கூடம் முடிஞ்சு போகையிலே வாங்கிக்கறேன் “ என்றாள். ஆனால் வள்ளியோ, அவசரமாக “ ஐயோ ! வேணாம் புள்ள ! அது விலை உசந்ததா இருக்கும் போல இருக்கு. நான் ஏதாச்சும் தெரியாம உடைச்சோ, பழுதாக்கியோ வெச்சுட்டேன்னா, நீ வீட்டுல திட்டு வாங்குவ. என்னால புதுசா வாங்கியும் தர முடியாது” என்று மறுத்தாள்.

        மாலையில் வீடு திரும்பியதும், அன்று பள்ளியில் நடந்தவை ஒன்று கூட விடாமல் தன் தாய் தகப்பனிடம் கூறிக் கொண்டிருந்தாள்.
“ ஐயா, இன்னைக்கு அந்த காரை வீட்டுப் பிள்ளை கண்மணி இல்ல, அது புதுசா ஒரு கடிகாரம் கட்டியிருந்தது. பாக்கவே ரொம்ப அழகா இருந்துச்சு. வாத்து பொம்மை போட்ட கடியாரம் அது. அந்த பொம்மை மொகம் மூடி மாதிரி இருந்துச்சு. அந்த மூடிய திறந்ததும் உள்ள அழகா கடிகாரம். நம்ம வீட்டுல இருக்குற கடியாரத்துல இருக்கற மாதிரி முள் எல்லாம் இல்ல. அதுல மணி அப்படியே வந்துச்சு. அதுல இருக்குற பட்டன அமுக்குனா கீ ! கீ !  சத்தம் கூட வந்துச்சு. அத அப்படியே பாத்துட்டே இருக்கலாம் போல இருந்துச்சு. அந்த பிள்ளை என்னைய  அந்த கடியாரத்தை கட்டிப் பாக்க சொன்னுச்சு. ஆனா, நாந்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்” என்றாள் வள்ளி.

        கடிகார நினைவுகளோடே உறங்கியும் போனாள். கனவிலும் அதே கடிகாரம் வந்து மகிழ்வூட்டியது. “ அழகா இருக்கு புள்ள. விலை உசந்ததா இருக்கும் போல. பத்திரமா வெச்சுக்கோ “ என்று தூக்கத்தில் பேசிக் கொண்டாள். மகளின் பேச்சைக் கேட்டு பெற்றோரும் புன்முறுவல் பூத்தனர். அடுத்த நாள் பள்ளிக்கூடம் முடிந்து, வீட்டிற்கு வந்த வள்ளி, பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். வீதியில் “ ஜிங் ! ஜிங் !” என்ற ஒலி. வாசலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வள்ளியின் தந்தை,  “அம்மாடி வள்ளி ! இங்க வா தாயீ !  என்று அழைத்தார். “ அதோ ! அங்கன போற ஜவ்வு மிட்டாய்க்காரரை கூப்பிடு ! “ என்றார். வாசலுக்கு ஓடி வந்த வள்ளி, ஜவ்வு மிட்டாய்க்காரரை கூப்பிட, வள்ளியின் தந்தை “ அப்பா ! ஒரு கடியாரம் செஞ்சு குடுப்பா !” என்றார்.

        வள்ளிக்கு அவர் வைத்திருந்த பெரிய கழியின் உச்சியில் அழகாக சிங்காரம் செய்யப்பட்டு, காதுகளில் ஜிமிக்கி, கைகளில் வளையல், கழுத்தில் சங்கிலி அணிந்து, இரண்டு கைகளையும் ஜால்ரா போல சேர்த்து “ஜிங் ! ஜிங் ! “ என்று தட்டிக் கொண்டிருக்கும் பொம்மையை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது. பொம்மையின் அடியில், கழியில் ரோஸ் மற்றும் வெள்ளை நிறக் கலவையுடன் ஜவ்வு மிட்டாய். ஜரிகைக் காகிதம் சுற்றப் பட்டு இருந்த அந்த ஜவ்வு மிட்டாயிலிருந்து கொஞ்சம் எடுத்து அதை இழுத்து, வளைத்து, உருட்டி அழகான கைக்கடிகாரமாக மாற்றிக் கொடுத்தார் அந்த ஜவ்வு மிட்டய்க்காரர். சிறிது மிட்டாயை எடுத்து மோதிரமாக மாற்றி விரலில் அணிவித்து விட்டு, இன்னும் கொஞ்சம் எடுத்து அவளது கன்னத்திலும் ஒட்டி விட்டார். வள்ளிக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

“ ஐயா ! இன்னொரு மயில் மிட்டாய் செஞ்சு வாங்கிக்கவா ? “ என்று ஆசை ஆசையாய் கேட்டாள் வள்ளி.

“ யாருக்கு தாயீ ? “, 

“ என் கூட படிக்கிற கண்மணிக்கு !” , 

 “சரி , வாங்கிக்கோ ! “ என்றபடி

“இன்னொன்னு செஞ்சு குடுத்துருப்பா “ என்றார் வள்ளியின் தகப்பனார்.
அதை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டாள் வள்ளி. “அம்மாடி! இப்போதைக்கு இந்த கடியார மிட்டாய வெச்சுக்கோ. இன்னும் செத்த நாள் பொறுத்து ஐயா உனக்கு நிஜ கடியாரமே வாங்கித் தாரேன் “ என்றார். மகிழ்ச்சியுடன் “ சரி ஐயா “ என்றவாறு குதித்தோடினாள் வள்ளி. அடுத்த நாள் பள்ளிக்கு செல்கையில், மறவாமல் ஜவ்வு மிட்டாய் வைத்திருந்த தூக்கினை எடுத்துக் கொண்டாள்.

        கண்மணியும் தன் தந்தை தனக்காக இருவேறு நிறங்களில் வாங்கிக் கொடுத்திருந்த கைகடிகாரங்களில், ஒன்றை தனக்கென வைத்துக் கொண்டு மற்றொன்றை ஆசைப்பட்டு கேட்ட தன் தோழிக்கு கொடுக்கப் போவதாய் சொல்லி தந்தையிடம் அனுமதி பெற்று வாங்கி வந்தாள். 

                                      **********

Sunday, April 12, 2015

வைரல் - சிறுகதை

"ஆவி டாக்கீஸ்" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..! 

 குறும்பட- சிறுகதை போட்டியில் ரூ. 1000 இரண்டாம் பரிசு பெறும் சிறுகதை..!


படைப்பாக்கம் :  திரு. பிரசன்னா கொத்து  அவர்கள் 


வைரல்  

              
       வினோத தொத்து வியாதி ஒன்று பரவியது. 'இந்த நோய் எனக்கு வந்துவிடுமோ' என்று ஒருவர் பயந்தால், அந்த நோய் உடனே அவருக்குத் தொத்திக்கொண்டு சரியாக ஒரு நிமிடத்தில் இறப்பு. அதற்கு வாலி என்று சம்பந்தமில்லாமல் பெயர் சூட்டுவதற்குள் அப்படி ஒரு பெயரை யோசித்தவரும் பயந்து பலியானார்.

      அந்த வைரஸ் பெரும் சக்தி பெற்றிருந்தது. அதற்குத் தேவையானது     எல்லாம் உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் மூளையில் அதைப்பற்றின பயம். உடனே பரவிவிடும். இப்படி ஒன்று பரவுகிறது என்று செய்தி வாசிப்பாளர் வாசித்ததுமே ஒரு நிமிடத்தில் இறந்தார். ஒரு சிலர் செய்தி வாசிக்கும்போது யோசிப்பதில்லை என்பதால் அவர்கள் மட்டும் அப்போதைக்குத் தப்பி பிறகு பொறுமையாக இறந்தனர். செய்தி எழுதுபவர்களுக்கும் அதே தான் நடந்தது.

       இந்த நோய் ஏற்கனவே கூட ஒருமுறை தோன்றியிருக்கிறது. ஆனால் அப்போது இது சிந்தனையினால் பரவும் என்று தெரியாததால் முதல் சில பேருடன் அமுங்கிவிட்டது. இந்த தடவை பேரழிவை ஏற்படுத்திவிட்டே மறையும் போல் தோன்றுகிறது. பேஸ்புக், ட்விட்டரிலும் அந்த நோயைப்பற்றி பகிர்ந்து பரப்பிக் கொத்துக் கொத்தாக இறந்தனர். பரப்பினால் பரவும் என்று தெரிந்தாலும் பரப்பினார்கள். இனி இந்த நோயைப்பற்றி யாரும் பேசக்கூடாது என அரசு தடை பிறப்பித்தது. ஆனால் தடையாணை வெளியிடுவதற்குள் அதிகாரிகள் அனைவரும் இறந்தனர். ஆனால் உப விளைவாக ஒரு நிமிட அன்பு எல்லா இடங்களிலும் ததும்பி ஓடியது. முந்தைய நிமிடம் வரை அடுத்தவரிடம் வெறுப்பை உமிழ்ந்தவர்கள் கூட பயந்ததும் கடைசி நிமிடத்தில் அனைவரிடமும் பரபரப்பான அன்போடு பழகினார்கள்.

       கடைசியாக எஞ்சியவர்கள் குழந்தைகள், சுயமாக யோசிக்க முடியாத மனநிலை சரியாக இருந்தவர்கள் (இறந்தவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள் என்று மாற்றி அழைக்கப்பட்டனர்), செய்தி பரவ முடியாத இடத்தில் இருந்த ஆதிவாசிகள் போன்றவர்கள்.
இவர்களுடன் அம்மாபாக்கம் ஏரியா பஞ்சாயத்து தலைவரும் பிழைத்தார். இப்படி ஒரு நோய் பரவுவதாகச் சொன்ன உதவியாளரிடம் அவர் கேட்டார், "இந்த பிரச்சினையில நமக்கு பணம் எதுவும் கிடைக்க வழியிருக்கா? எவ்வளவு தேறும்?உதவியாளர் பதிலேதும் சொல்வதற்குள் இறந்து விழுந்ததும் தலைவர் நோயைப்பற்றி அதற்குப் பிறகு சிந்திக்கவில்லை.

இன்னொரு முக்கியமான விஷயம். இக்கதையின் கடைசி வரியை எழுதி முடித்ததும் கதாசிரியர் ஒரு நிமிடத்தில் மாண்டார். உங்களுக்கு இன்னும் அறுபது நொடிகள்அவகாசம்.

                                      **********